Health Tips | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Health Tips

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Health Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Health Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது - These vegetables should not be kept in the fridge - Tamil Awareness

 இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.... 💚❤️These vegetables should not be kept in the fridge

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பாதுகாக்கும் சமையல் தோழனாக குளிர்சாதன பெட்டி அமைந்திருக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மையும் அதில் இருக்கிறது. பொதுவாக பிரிட்ஜை 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த வெப்பநிலை உணவு பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க உதவும். எனினும் எல்லா வகையான உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது. தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தக்காளி: இதனை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் அதன் தரமும், ருசியும் குறைந்துபோய்விடும். குளிர்ந்த வெப்பநிலை தக்காளியின் உள் அடுக்குகளின் தன்மையை மாற்றிவிடும். பிரிட்ஜுக்குள் அதிக நாட்கள் தக்காளியை வைத்திருந்தால் அதன் மென்மைத்தன்மை நீங்கிவிடும். வெளிப்புற தோல் சுருங்கிப்போய் சுவையற்றதாக மாறிவிடும். தக்காளியை அறையின் வெப்பநிலையில் காற்றோட்டமாக வைத்திருப்பதே நல்லது.

கத்திரிக்காய்: இது வெப்பநிலை உணர் திறன் கொண்ட காய்கறியாகும். 50 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழேதான் பிரிட்ஜின் வெப்பநிலை இருக்கும் என்பதால் அந்த வெப்பநிலை கத்தரிக்காய்க்கு ஒத்துக்கொள்ளாது. அதன் சுவையை குறைத்துவிடும். அறையின் வெப்பநிலைதான் கத்திரிக்காய்க்கு உகந்தது. அதுபோல் பிற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. தனியாக வைத்திருப்பதுதான் நல்லது.

பிரெட்: பொதுவாகவே பிரிட்ஜில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை சில பொருட்களை எளிதில் உலரவைத்துவிடக்கூடும். பிரெட்டும் குளிர்ந்த வெப்பநிலையில் சட்டென்று உலர்ந்துபோய்விடக்கூடியது. குளிர்ந்த சூழலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் தன்மையே மாறிப்போய்விடும்.

வெங்காயம்: இதனை பிரிட்ஜுக்குள் வைத்தால் மென்மையாக மாறிவிடும். அதில் பூஞ்சையும் படரக்கூடும். வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பூண்டு: பிரிட்ஜுக்குள் பூண்டுவை சேமித்து வைக்கக் கூடாது. அதில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை பூண்டுவின் சதை பகுதியை கடினமான தாக்கிவிடும். நீண்ட நாட்கள் சேமித்துவைத்தால் முளை விடக்கூடும். காற்றோட்டமான கூடையில் சேமித்துவைத்தால் ஒரு மாதம் கூட உபயோகிக்கலாம். கெட்டுப்போகாது.

உருளைக்கிழங்கு:
உலர்ந்த இடத்தில் உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதுதான் நல்லது. பிரிட்ஜின் குளிர்ச்சி தன்மை உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சுவையும் குறைந்துபோய்விடும். பிரிட்ஜுக்குள் நீண்ட நாட்கள் உருளைக்கிழங்கை வைத்திருந்தால் மேற்புற தோல் கருமையாக மாறிவிடும்.

ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது ஆரஞ்சு. அதனை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்தால் தோல் பகுதியில் புள்ளிகள் தோன்றக்கூடும். மென்மை தன்மையும் மாறக்கூடும். கடினமான தோல் கொண்ட ஆரஞ்சுக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.

பப்பாளி: பப்பாளியையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில்தான் பப்பாளியை வைக்க வேண்டும்.

தேன்: இது இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அறையின் வெப்பநிலையில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். பிரிட்ஜுக்குள் சேமித்துவைத்தால் கடினமாகிவிடும்.

ஊறுகாய்: ஊறுகாய் தயாரிக்கும்போது உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. அவை கெட்டுபோகாத அளவிற்கு பதப்படுத்தப்படுகிறது. அதனால் அதனை குளிர்ந்த வெப்பநிலையில் வைத்திருப்பது தேவையற்றது.

வாழைப்பழம்: வாழை மரங்கள் வெப்பமான காலநிலையில் வளர்க்கப்படுகின்றன. பழங்களை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இயற்கையாக பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும்.

சாக்லெட்: நிறைய பேர் சாக்லெட்டை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்து சாப்பிடுகிறார்கள். அப்படி குளிரவைப்பதன் மூலம் அதன் சுவை மாறுபடலாம்.

ஆப்பிள்: இதனை பிரிட்ஜில் வைப்பதை விட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். அறை வெப்பநிலையில் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் உபயோகிக்கலாம்.

மாவு: குளிர்ந்த வெப்பநிலையில் மாவை வைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருந்தாலும் பிரிட்ஜில் வைக்க தேவையில்லை. காற்றுப்புகாத அளவுக்கு இருக்கமாக மூடி வைத்தாலே போதுமானது.


 

வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு! -

 வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு!

எதனால் உப்பி விடுகிறது..?

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே.

குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது. மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.

 சீமை சாமந்தி டீ

வயிறு உப்பி கொண்டே போவதை விரைவிலே குணப்படுத்த இந்த சீமை சாமந்தி டீ உதவும்.

செய்முறை :-  நீரை கொதிக்க விட்டு அதில் சீமை சாமந்தி பூவை போடவும். 5-10 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறியவுடன் வடிகட்டி கொள்ளவும். இந்த டீயுடன் தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். தினமும் 2 அலல்து முறை இந்த டீயை குடித்து வந்தால் எளிதாக வயிற்று உப்பசத்தை குறைத்து விடலாம்.

 இஞ்சி டீ

வயிற்று உப்பி கொண்டிருக்கும் பிரச்சினைக்கு வேறொரு அற்புதமான தீர்வு இந்த இஞ்சி தான். தண்ணீரை கொதிக்க விட்டு அதில் சிறிது இஞ்சியை நசுக்கி போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்ட பின், இதனை வடிகட்டி கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேனை கலந்து குடித்து கொள்ளலாம்.

 புதினா டீ

உங்களின் பிரச்சினையை மிக சுலபமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புதினா டீயிற்கு உள்ளது.

செய்முறை :- முதலில் நீரை கொதிக்க விட்டு, பிறகு கை நிறைய புதினா இலைகளை அந்த நீரில் போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வருவதால் செரிமான பிரச்சினை, வயிற்று உப்பசம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.

நம் வீட்டில் இருக்கும் இந்த எலுமிச்சையை வைத்தே நாம் வயிற்று உப்பசத்தை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதற்கு, முதலில் நீரை கொதிக்க விட்டு அதில் எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் & தேன் கலந்து குடித்து வரவும். இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் விரைவாக உப்பிய வயிறு குறைந்து விடும்.

மேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் வயிற்று உப்பசத்தை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! - Grandmother's cure for 12 types of diseases - Home Remedies

 12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! -  Grandmother's cure for 12 types of diseases

✍️என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்க வழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.

இன்று பாட்டி வைத்தியத்தில், உடலின் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. தலைவலி குணமாக: Headache

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.

வெற்றிலையை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறில் கிராம்பை நன்றாக அரைத்து கொண்டு, நெற்றியின் இரண்டு பொட்டு பகுதியில் நன்றாக தேய்த்து வந்தால் தலை வலி குணமாகும்.

2. வாய் புண் குணமாக:Mouth sore

மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3. பல் வலி குணமாக:Toothache

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

4. வறட்டு இருமல் குணமாக:dry cough

கிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து, காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

5. விக்கல் குணமாக:Hiccups

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

6. ஓயாத சளி குணமாக:Cold

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

7. கழுத்துச் சுளுக்கு குணமாக:Neck sprain

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

8. தூக்கமின்மை குணமாக:Insomnia

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

9. மூலம் குணமாக:

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

10. நினைவாற்றல்:

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை கீரையை தினமும் துவையல் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.

11. ஒற்றை தலைவலி குணமாக:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

12. கால் ஆணி குணமாக:

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

Tamil health tips -வீட்டு வைத்தியம்

காஷ்மீர் குங்குமப்பூ - Kashmir saffron - Tamil Health Tips

 காஷ்மீர் குங்குமப்பூ 🍂🍂🍂 *Organic Kashmir Saffron *

🍂குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது.

🍂இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது.

🍂இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

🍂இதை தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் சருமம் பொலிவுபெறும் உடல் வலுப்பெறும்.

🍂கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் மிகவும் நல்லது.

🍂குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.

🍂குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந்து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்...!!!

இயற்கையாக உடல் சூடு குறைய கோடை பானங்கள் - summer drinks - Decrease body heat naturally

 

அடுத்து நாம் எதிர்கொள்ள இருக்கும் வெயில் காலம்
சில இயற்கை வைத்திய டிப்ஸ்....Decrease body heat naturally

✍  இயற்கையாக உடல் சூடு குறைய

வெண்ணெய் மற்றும் பால்

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.
வைட்டமின் சி  நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்

மோர்

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

புதினா டீ

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

சோம்பு நீர்

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கரும்பு ஜூஸ்

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும்.

முள்ளங்கி

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

முலாம் பழம்

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
   

தர்பூசணி

உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது நாட்டுசர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

மாதுளை ஜூஸ்

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவன்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்...!!!

summer drinks  - Decrease body heat naturally
💐💐

திங்கள், 16 நவம்பர், 2020

*தேனின் வகைகளும் பயன்களும்*

*இயற்கையே சிறந்த மருத்துவர்*

*தேனின் வகைகளும் பயன்களும்* 

தேன் உடலின் ஒவவோர் உறுப்புக்கும் ஊட்டத்தை அளிக்கக்கூடியது. அதனால்தான் தேனை அமிர்தத்துக்கு நிகராகச் சொல்கின்றனர்.

தேனின் வகைகள்

எந்தப் பூவில் இருந்து தேன் எடுக்கப்படுகிறதோ, அந்தப் பூவின் தன்மையைப் பொருத்து தேனின் தன்மையும் குணமும் மாறுபடும். அதற்குக் காரணம் அதன் மகரந்த போலன்.

நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை ஐந்தாகப் பிரிக்கின்றனர்.

மலைத் தேன்: மலைகளில் கிடைப்பது. அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.

கொம்புத் தேன்: மரத்தில் கிடைப்பது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

பொந்துத் தேன்: மரப்பொந்துகளில் கிடைப்பது. எடை சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுத் தேன்: மலைப் புற்றுகளில் கிடைப்பது. குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.

மனைத் தேன்: வீடுகளில் கிடைப்பது. முடி சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும்.

தேனில் உள்ள நீர் அளவு குறையும்போது, தேன் கற்கண்டு உருவாகும். தேன் கற்கண்டு (டெரிஜியம்) கண்புரை மற்றும் கண்சதை வளர்வதைத் தடுக்கும்.

பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும்.

பால், பாசிப்பயறு மற்றும் தயிரைத் தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிவர முகப் பொலிவு கூடும்.

கிரீன் டீ உடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி, ஓரு மணி பின் குளிக்க,முடிக் கொட்டுதல் நிற்கும்.

தேனை, சுண்ணாம்புடன் சேர்த்துப் பத்து போட்டால், வலி, வீக்கங்கள் குறையும்.

தூதுவளைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்க, சளியைக் குணப்படுத்தும்.

கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்தசோகைப் போகும்.

தேங்காய்ப்பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

பார்லி அரிசிக் கஞ்சியைத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, அல்சர் குணமாகும்.

தேனுடன் ஆமணக்கு 15 மி.லி சேர்த்துச் சாப்பிட, குழந்தைகளுக்கு சிறுநீர் பிரிவது சீராகும்.

பூண்டு, தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.

தேனை வெந்நீர் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு
சரியாகும்.

துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு
பலன் தரும்.

தேன், மிளகுடன் சேர்ந்துச் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல சக்தி உண்டாகும்.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.

40 வயதைக் கடந்தவர்கள், நீர் அல்லது பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால்,
கால்சியம் சத்தின் அளவு கூடும்.

தேனை, தீப்புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும்.

ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.

நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

இஞ்சிச் சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் தீரும்.

ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.

மாதுளை மனப்பாகு – மூன்று மாத கர்ப்பிணிகள், மாதுளம் பழச்சாறு, தேன், பன்னீர் ரோஸ், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல் குறைவதுடன், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். மேலும், வாந்தி வருவது போன்ற உணர்வு குறையும்.

தேனை யாருக்குக் கொடுக்கக் கூடாது

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.

தேனை எப்படிச் சாப்பிடக் கூடாது

தேனை சூடுபடுத்தக் கூடாது.

தேனை நெய் மற்றும் எண்ணெய் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

போலன் அதிகமாக உள்ள தேனைச் சாப்பிடக் கூடாது!!!🙏🙏

புதன், 27 மே, 2020

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

Dr ரம்யா_post
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

ஞாயிறு, 17 நவம்பர், 2019

நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்

@@# நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்@@

நடைபயிற்சி என்றால் என்ன?

🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.

🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.

மெதுவாக நடப்பது :

🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.

🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.

🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

பவர் வாக்கிங் :

🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.

🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.

🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.

🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

ஜாகிங் :

🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.

🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.

🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.

🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.

🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.

நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் :

🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.

🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.

🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.

🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.

🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.

🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.

🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.

🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.

🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.

🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.

சனி, 29 ஜூன், 2019

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது


 இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வளருமே தவிர கட்டுக்குள் வராது 

இந்த நோயின் ஆரம்ப நிலையை அறியமுடியாது ஒரளவுக்கு இரத்தத்தில் கலந்த பிறகு கண் மஞ்சளாக மாறும் உள்ளங்கை மஞ்சளாக மாறும் வயிற்றின் மேல்பகுதி அடிக்கடி வலிக்கும் சிறுநீர் மஞ்சலாக வரும்  இரத்த பரிசோதனையில் மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்

 இதை சரி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கானபேட்டை ஊரில் நாட்டு மருந்து தரப்படுகிறது

 இந்த ஊரை கடுக்காய்பட்டி கடியாப்பட்டி கரியாபட்டி என சொல்கிறார் இந்த ஊரின் அருகில் உள்ள பெரிய ஊர் கடியாப்பட்டி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வானளாவிய அரண்மனை வீடுகள் உள்ள ஊர் கடியாபட்டி இந்த ஊரை கடந்து 2 கி மீட்டர் சென்றால் கானபேட்டை ஊரில் அழகுகோனார் ஆகியோர் நாட்டு மருந்து  தருகின்றனர்螺

 புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை
 மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் மிக சிறந்த டாக்டர்களால் கைவிட பட்டாலும் இவரை நம்பி போகலாம் நிவர்த்தி கிடைக்கும் காலை 6 மணிமுதல் 10 மணிக்குள் மருந்து தருகிறார்கள் வெயில் வந்த பிறகு மருந்து தருவது நிறுத்தபடுகிறது

☘ ஒரு நபருக்கு 401 ரூபாய் மட்டும் கட்டணம் பெற படுகிறது மருந்நு கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக உப்பு இல்லாத பொங்கல் சர்க்கரை சாப்பிட தருவார்கள் குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள் 

மற்ற பத்தியம் எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக சொல்வார்கள் 

குறிப்பு மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் இங்கு சரிசெய்யபடுகிறது மருந்து சாப்பிட்ட பிறகு 3 மாதம் மது நாட்டுகோழி பிராய்லர் கோழி தேங்காய் தேங்காய் எண்ணெய் மாம்பழம் கருவாடு  போன்றவற்றை தவிர்க்க வேண்டும் தலைக்கு நல்லண்னை மட்டும் தடவலாம்

மருந்து சாப்பிட்ட அன்று  மதியம் 12 மணிக்கு மேல் காய்ச்சல் வரும் 2 மணிக்கு தலைவலி  ஏற்படும் 4 மணிக்கு தலைவலி மிக அதிகமாக இருக்கும் எந்த மாற்று மருந்தும் எடுத்துகொள்ள ௯டாது வாந்தி ஏற்படும் நாம் குடித்த நாட்டு மருந்து உடம்பில் அனைத்து பாகத்திற்கும் சென்று மஞ்சள்காமாலையின் கழிவுகளை வாந்தியாக வெளிகொண்டு வரும் வாந்தி வருவது நல்லதுக்கே வாந்தி அதிகமாக வந்தால் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவும்  2 அல்லது 3 முறை வாந்தி நின்றவுடன் தலைவலி காய்ச்சல்  குறைந்து விடும் 

மறுநாள் காலை நல்லண்ணை தலைக்கு உடம்பிற்கு தேய்த்து குளித்து நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துகொள்ளலாம் தேங்காய் தேங்காய் என்னை நாட்டுகோழி பிராய்லர் கோழி மாம்பழம் குறிப்பாக சரக்கு மது பான்பாராக் ஹான்ஸ் ஆகியன தவிர அனைத்து காய்கறி சாம்பார் சாப்பிடலாம் 10 நாட்களுக்கு பிறகு ஆசையாக இருந்தால் ஆட்டுகறி எடுத்துகொள்ளலாம் 

 மஞ்சள் காமாலை வரமால் இருக்க பிராய்லர் நாட்டுகோழி தவிர்க்க வேண்டும் தொடர்ந்து அடிக்கடி நல்லண்னை தேய்த்து குளிக்க வேண்டும் தினமும் மது அருந்தினால் மஞ்சள் காமாலை நிச்சயம் ஏற்படும் மொத்தத்தில் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டால் மஞ்சள்காமாலை நோயை தவிர்க்கலாம் 

மருத்துவரின் செல் நம்பர் காலை 11 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்
 *அழகுகோனார்  94435 78856பலருக்கும் பயன்படும் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் *⊰⊰⊰⊰எ⊱⊰ண்⊱⊰ண⊱⊰ம்⊱⊱⊱⊱ ⊰போ⊱⊰ல்⊱ ⊰வா⊱⊰ழ்⊱⊰வு⊱• ⊰•*

ஞாயிறு, 23 ஜூன், 2019

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???* தயவு செய்து

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து

*வேர்க்கடலை,*

*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,

*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

*ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*

 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள். 

கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு  சாப்பிடக்கூடாது.
மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.
முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை  சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.  

பழைய சோற்றில் தயிர் ஊற்றி  சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.
பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்  எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.  மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.   மாதாந்திர பிரச்சினை உள்ள  பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்   6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,   சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.   வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,  பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.  அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.  குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.


8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு  சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு 
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,   இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை   கட்டாயம் உறங்க வேண்டும்.
இனிய நற்காலை நல்வாழ்த்துக்கள் ........

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க….!!






கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க…

சமையலறையில்  பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

மொபைல் நீரில் விழுந்தால்:

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.
நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

ஆவணங்கள்:

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

துணிகள் காயவைக்க:
நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

கத்தி கூர்மையாக:

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

துர்நாற்றம்:

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.
வளர்ப்பு பிராணிகள்:

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

நகைகள்:

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

அலங்காரப் பொருட்கள்:

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

ஜன்னல்கள்:

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

ஷூ துர்நாற்றம்:

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.

குறிப்பு:

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..

ஞாயிறு, 25 நவம்பர், 2018

நோய்கள் உருவாகும் இடங்கள் ! குணமாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

----------------------------------------------

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்...

சனி, 22 செப்டம்பர், 2018

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை  குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��
❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
�� �� ��
��

இயற்கை மருத்துவம் :- 28 Tips

இயற்கை மருத்துவம் :- 

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 

7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"

8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 

9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"

14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"

18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\" 

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\" 

26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.



வெள்ளி, 25 மே, 2018

🌸 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

🌸 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

💁🏻‍♀  *Kidney - சிறுநீரகம் :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

💁🏻‍♀ *Stomach - வயிறு :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.

💁🏻‍♀ *Lungs - நுரையீரல் :* புகைப்பிடித்தல்.

💁🏻‍♀ *Lever - கல்லீரல் :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

💁🏻‍♀ *Heart - இதயம் :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.

💁🏻‍♀ *Pancreas - கணையம் :* அதிகப்படியான நொறுக்கு தீனி

💁🏻‍♀ *Intestines - குடல் :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

💁🏻‍♀ *Eyes - கண்கள் :* தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

💁🏻‍♀ *Gall bladder - பித்தப்பை :* காலை உணவை தவிர்ப்பது.

🙋🏻நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.🙋🏻

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

💁🏻‍♀ உங்கள் சுற்றத்திற்கும்
இதை பகிரவும் 💁🏻‍♀

வெள்ளி, 30 ஜூன், 2017

ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!


காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்

Popular Posts

Facebook

Blog Archive